செய்திகள்
டிஜிபி திரிபாதி

12 மாவட்டங்களில் புயல் நிவாரண பணிகளை கண்காணிக்க போலீஸ் அதிகாரிகள் நியமனம்- டிஜிபி உத்தரவு

Published On 2020-11-24 06:42 GMT   |   Update On 2020-11-24 06:42 GMT
நிவர் புயலால் பாதிக்கப்படும் 12 மாவட்டங்களுக்கு நிவாரண உதவி மற்றும் கண்காணிப்பு பணிகளுக்கு காவல் துறை உயர் அதிகாரிகளை தமிழக போலீஸ் டிஜிபி திரிபாதி நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

சென்னை:

சென்னைக்கு செயலாக்க பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குநர் விஸ்வநாதன், நியமிக்கப்பட்டுள்ளார்.

மாவட்டம் வாரியாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் விவரம் வருமாறு:-

காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள்- ஐ.ஜி அன்பு, (சிலை கடத்தல் தடுப்பு பிரிவு)

திருவள்ளூர் மாவட்டம்- ரெயில்வே பிரிவு ஐ.ஜி. வனிதா.

விழுப்புரம் மாவட்டம்- பயிற்சி பிரிவு டி.ஐ.ஜி. சத்ய பிரியா.

கடலூர் மாவட்டம்- வடக்கு சரக டி.ஐ.ஜி. நாகராஜன்.

திருச்சி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்கள்- பயிற்சி பிரிவு ஐ.ஜி. சாரங்கன்.

புதுக்கோட்டை மாவட்டம்- சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டி.ஐ.ஜி. லலிதாலட்சுமி.

தஞ்சாவூர் மாவட்டம்- தலைமையக டி.ஐ.ஜி. செந்தில்குமாரி.

திருவாரூர் மாவட்டம்- ஆயுத படை ஐ.ஜி. தமிழ் சந்திரன்.

நாகப்பட்டினம் மாவட்டம்- மத்திய சரக ஐ.ஜி. ஜெயராமன் ஆகியோர் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News