செய்திகள்
கோப்புப்படம்

காஞ்சீபுரத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு

Published On 2021-06-06 17:52 GMT   |   Update On 2021-06-06 17:52 GMT
ஊரடங்கு காரணமாக அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு அறநிலையத்துறை சார்பில் உணவுபொட்டலங்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.
காஞ்சீபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் தினந்தோறும் உணவு பொட்டலங்கள் தயாரிக்கப்பட்டு அவை வாலாஜாபாத், காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு எடுத்து செல்லப்படுகிறது. இந்த நிலையில் உணவு தயாரிக்கப்படும் வழக்கறுத்தீஸ்வரர் கோவில் வளாகத்தில் சுகாதாரமின்றி உணவு தயாரிக்கப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இந்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உணவு தயாரிப்பவர்கள் தலையில் உள்ள முடி உதிர்ந்து விழாமல் இருக்க போட வேண்டிய மூடி போடாமல் இருந்தது, காலாவதியான பொருட்களை கொண்டு உணவு தயாரித்தது போன்றவற்றை கண்டறிந்தனர். உணவை சுகாதாரான முறையில் தயாரிக்குமாறு கோவில் செயல் அலுவலர் ஆ.குமரனிடம் அறிவுறுத்தினர்.

இது குறித்து காஞ்சீபுரம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் அனுராதா கூறுகையில்:-

சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பதாக வீடியோ ஒன்று எடுத்து ஒருவர் அனுப்பி இருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் அங்கு விசாரணை மேற்கொண்டோம். உணவு சுவையானதாகவும், தரமானதாகவும் இருந்தது. ஆனால் முடி உதிராமல் இருக்க போட வேண்டிய மூடி மட்டும் போடாமல் இருந்தனர். தக்க அறிவுரைகளை வழங்கி உணவு தயாரிக்குமாறு அறிவுறுத்தியிருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News