உள்ளூர் செய்திகள்
கொல்லிமலையில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை
கொல்லிமலையில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்துகொண்டார்.
சேந்தமங்கலம்:
கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம் தேவனூர் நாடு ஊராட்சியில் உள்ள விலாரம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். அவருடைய மனைவி சசிகலா(வயது 33). குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினமும் அவர்களிடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சசிகலா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை கொண்டார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வாழவந்தி நாடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
பின்னர் சசிகலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சசிகலா தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.