வழிபாடு
கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில்சர்வ பூபால, குதிரை வாகன சேவை

கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் சர்வ பூபால, குதிரை வாகன சேவை

Published On 2022-02-28 08:38 GMT   |   Update On 2022-02-28 08:38 GMT
திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளில் தேரோட்டத்துக்கு பதிலாக சர்வபூபால வாகனச் சேவை நடந்தது.
திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 8-வது நாளான நேற்று காலை 7.35 மணியில் இருந்து காலை 8.30 மணி வரை தேரோட்டத்துக்கு பதிலாக சர்வபூபால வாகனச் சேவை நடந்தது.

அதில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை குதிரை வாகனச் சேவை நடந்தது.

வாகனச் சேவையில் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News