செய்திகள்
டாம் பெஸ்

காலே டெஸ்ட்: 135 ரன்னில் சுருண்ட இலங்கை- டாம் பெஸ் அபாரம்

Published On 2021-01-14 09:43 GMT   |   Update On 2021-01-14 09:46 GMT
காலே மைதானத்தில் இன்று தொடங்கிய டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 135 ரன்னில் சுருண்டது.
இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் காலோ மைதானத்தில் இன்று தெடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர் திரிமானே 4 ரன்னிலும், குசால் பெரேரா 20 ரன்னிலும் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த குசால் மெண்டிஸ் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அனுபவ மேத்யூ 27 ரன்களும், சண்டிமல் 28 ரன்களும் எடுத்தனர். ஆனால் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் டாம் பெஸ் விக்கெட்டுகளாக சரிக்க இலங்கை அணி 135 ரன்னில் சுருண்டது. அந்த அணியால் 46.1 ஓவர்கள் மட்டுமே சந்திக்க முடிந்தது.

இங்கிலாந்து அணி சார்பில் டாம் பெஸ் 10.1 ஓவரில் 30 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கட் வீழ்த்தினார். ஸ்டூவர்ட் பிராட் 9 ஓவரில் 20 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.
Tags:    

Similar News