செய்திகள்

தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகிய எம்.பி.க்கள் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

Published On 2019-06-21 15:38 GMT   |   Update On 2019-06-21 15:38 GMT
தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்த ராஜ்யசபா எம்.பி.க்கள் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்தனர்.
புதுடெல்லி:

பாராளுமன்றத் தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற்றது. சட்டசபைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் தோல்வியை தழுவியது.

பாராளுமன்றத் தேர்தலில் 3 தொகுதிகளில் மட்டுமே தெலுங்கு தேசம் வென்றது. மாநிலத்தில் ஆட்சியை இழந்ததுடன் பாராளுமன்ற எம்.பி.க்களின் எண்ணிக்கையும் குறைந்தது.

இதற்கிடையே, ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி.க்களான ஒய்.எஸ்.சவுத்ரி, ரமேஷ், வெங்கடேஷ் உள்ளிட்ட  4 பேர், பா.ஜ.க. செயல் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் டெல்லியில் நேற்று அக்கட்சியில் இணைந்தனர். அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியை தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்த ராஜ்யசபா எம்.பி.க்கள் இன்று சந்தித்தனர்.
Tags:    

Similar News