உள்ளூர் செய்திகள்
திருட்டு

ஓசூர் அருகே தொழிலாளி வீட்டில் நகை திருட்டு

Published On 2021-12-04 08:36 GMT   |   Update On 2021-12-04 08:36 GMT
ஓசூர் அருகே தொழிலாளி வீட்டில் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:

ஓசூர் சுண்ணாம்பு ஜீபியை சேர்ந்தவர் ராமன். இவரது மனைவி ஜெயா (வயது 62). தொழிலாளி. சம்பவத்தன்று இவர் ஓசூர் பூ மார்க்கெட்டுக்கு வேலைக்காக சென்றார். பின்னர் வேலை முடிந்து அவர் வீட்டிற்கு திரும்பினார். அப்போது, வீட்டில் பெட்டியில் வைத்திருந்த 1¾ பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. இதுகுறித்து அவர் ஓசூர் அட்கோ போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News