உள்ளூர் செய்திகள்
கப்பலூரில் டாஸ்மாக் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் தொழிற்பேட்டை டாஸ்மாக் குடோன் முன்பு தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சி.ஐ.டி.யு. மாநில தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார்.
டாஸ்மாக் கடைகளுக்கு வினியோகிக்க மதுபான பெட்டிகளை லாரிகளில் ஏற்றுவதற்கு ஒரே மாதிரி யாக ஏற்றுக் கூலி பெட்டி ஒன்றுக்கு ரூ. 3.50 வழங்க வேண்டும். மேலும் 2, 3 மாதங்களாக ஏற்றுக்கூலியை பாக்கி வைத்துள்ளனர்.
சுமைப்பணி தொழி லாளர் களுக்கு மாத சம்பளம் இல்லை என்பதால் தினமும் கூலி வழங்கப்பட வேண்டும். குடோன்களில் தினமும் கூலி வழங்கி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க உடனடியாக நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சென்னை அம்பத்தூர் குடோனில் வழங்கியது போல் ட்ராலியை அனைத்து மதுபான குடோன்களுக்கும் டாஸ்மாக் நிறுவனம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதில் தலைவர் பச்சமால், பொருளாளர் பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.