ஆன்மிகம்
கனக துர்க்கை

பண்ருட்டி சோமேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை

Published On 2021-07-28 03:13 GMT   |   Update On 2021-07-28 03:13 GMT
பண்ருட்டியில் பழமை வாய்ந்த சோமேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள கனக துர்க்கை அம்மன் கோவிலில் ஆடி மாத 2-வது செவ்வாய்க்கிழமையையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது.
பண்ருட்டியில் பழமை வாய்ந்த சோமேஸ்வரர் கோவில் வளாகத்தில் கனக துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத 2-வது செவ்வாய்க்கிழமையையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது.

அதன்படி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பழங்கள் மற்றும் மலர் அலங்காரத்தில் கனகதுர்க்கை அம்மன் எழுந்தருளினார்.

அப்போது அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News