செய்திகள்

காதல் தோல்வியால் இளம்பெண் தற்கொலை

Published On 2018-11-07 07:25 GMT   |   Update On 2018-11-07 07:25 GMT
ஸ்ரீபெரும்புதூர் அருகே காதல் தோல்வியால் மனவேதனை அடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்:

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வெங்கவேடு ஊராட்சி துலுக்காத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கீர்த்திகா (22). இவர் அதே பகுதியை சேர்ந்த வாலிபரை காதலித்தார். அவருக்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய பெற்றோர் ஏற்பாடு செய்தனர். இதனை அறிந்த கீர்த்திகா காதலன் வீட்டுக்கு சென்று கேட்டார்.

அப்போது கீர்த்திகாவை திருமணம் செய்ய முடியாது என்று காதலன் கூறியதாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த கீர்த்திகா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News