ஆன்மிகம்
முதனை செம்புலிங்க அய்யனார் மற்றும் முதுகுன்றீஸ்வரருக்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றபோது எடுத்த படம்.

முதனை செம்புலிங்க அய்யனார் கோவிலில் தீர்த்தவாரி

Published On 2021-01-30 08:31 GMT   |   Update On 2021-01-30 08:31 GMT
முதனை செம்புலிங்க அய்யனார் கோவிலில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் அருகே முதனை கிராமத்தில் செம்புலிங்க அய்யனார் மற்றும் பெரியநாயகி உடனுறை முதுகுன்றீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூச தீர்த்தவாரி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்த தினசாி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் சாமி வீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச தீர்த்தவாரி திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதையொட்டி செம்புலிங்க அய்யனார் மற்றம் முதுகுன்றீஸ்வரருக்கு பால், தயிர், இளநீர், தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் சாமிகள் சிறப்பு அலங்காரத்தில் கோவிலுக்கு அருகில் உள்ள ஏரியில் எழுந்தருளினர். தொடர்ந்து அங்கு சாமிகளுக்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் முதனை மற்றம் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து நேற்று சண்டிகேஸ்வரர் உற்சவம் நடைபெற்றது. இன்று(சனிக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் முத்து ராஜா, ஆய்வாளர் லட்சுமி நாராயணன், ஊராட்சி மன்ற தலைவர் செல்வராசு உள்பட பலர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News