உள்ளூர் செய்திகள்
முக கவசம் அணியாமல் செல்பவருக்கு அபராதம் விதிக்கும் போலீசார்.

திருவள்ளூரில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பு தீவிரம்

Published On 2022-01-19 10:15 GMT   |   Update On 2022-01-19 10:15 GMT
முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றுபவர்களுக்கு அபராதம் விதிப்பது அதிகரிக்கப்பட் டுள்ளது. போலீசாரும், சுகாதார அதிகாரிகளும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

திருவள்ளூர்:

தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் 100-க்கும் கீழ் இருந்த பாதிப்பு தற்போது ஆயிரத்தை நெருங்கி வருகிறது. நேற்று ஒரே நாளில் 854 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து மாவட்டத்தில் நோய் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றுபவர்களுக்கு அபராதம் விதிப்பது அதிகரிக்கப்பட் டுள்ளது. போலீசாரும், சுகாதார அதிகாரிகளும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

நேற்று ஒரே நாளில் திருவள்ளூர் மாவட்டத்தில் முகக் கவசம் அணியாத 366 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண் குமார் உத்தரவின் பேரில் காவல் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தலைமையில் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிவது குறித்து பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டன.

திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரன் தாசன் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பாபி மைக் மூலம் முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, முகக்கவசம் அணியாதவர்களுக்கு இல வசமாக முகக்கவசங்கள் வழங்கினர்.

Tags:    

Similar News