செய்திகள்
உயிரிழப்பு

வேலூர் ஜெயில் கைதி உயிரிழப்பு

Published On 2021-11-24 10:27 GMT   |   Update On 2021-11-24 10:27 GMT
வேலூர் ஜெயில் கைதி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பாகாயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள கொசப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 38). கடந்த மாதம் 7-ந்தேதி ஆரணி போலீசார் திருட்டு வழக்கில் அவரை கைது செய்தனர்.

பின்னர் அவர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இந்ந நிலையில் கடந்த 19-ந்தேதி லோகநாதனுக்கு பக்கவாதம் ஏற்பட்டு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

உடனடியாக அவரை வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த லோகநாதன் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாகாயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News