செய்திகள்
கர்நாடகாவில் 3.2 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்
கர்நாடக மாநிலத்தில் இன்று மாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
பெங்களூர்:
கர்நாடக மாநிலம் விஜய்புராவில் இன்று மாலை 6.21 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 3.2 ரிக்டர் அளவுகோலில் பதிவானது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரம் வெளியாகவில்லை.