செய்திகள்
காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் எதிர்காலம் கிடையாது- அமைச்சர் ஜெயக்குமார்
காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் எதிர்காலம் கிடையாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னை:
நேதாஜியின் 125-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி சென்னையில் உள்ள நேதாஜி சிலைக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மரியாதை செலுத்தினார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “மீனவர்கள் உயிரிழப்பு விவகாரத்தில் மத்திய அரசிடம் உரிய அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. மீனவர்களின் உயிரிழப்பில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படும் வரை ஓயமாட்டோம்” என்று தெரிவித்தார்.
மேலும், காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் எதிர்காலம் கிடையாது என்றும் ராகுல் காந்தியின் சுற்றுப்பயணம் தமிழ்நாட்டு மக்களிடம் எடுபடாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
நேதாஜியின் 125-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி சென்னையில் உள்ள நேதாஜி சிலைக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மரியாதை செலுத்தினார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “மீனவர்கள் உயிரிழப்பு விவகாரத்தில் மத்திய அரசிடம் உரிய அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. மீனவர்களின் உயிரிழப்பில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படும் வரை ஓயமாட்டோம்” என்று தெரிவித்தார்.
மேலும், காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் எதிர்காலம் கிடையாது என்றும் ராகுல் காந்தியின் சுற்றுப்பயணம் தமிழ்நாட்டு மக்களிடம் எடுபடாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.