செய்திகள்
வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு - வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங்

வேளாண் மசோதாக்களால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பில்லை- வேளாண் துறை செயலாளர் விளக்கம்

Published On 2020-09-25 05:29 GMT   |   Update On 2020-09-25 05:29 GMT
வேளாண் மசோதாக்களால் தமிழக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் விளக்கம் அளித்தார்.
சென்னை:

சென்னை தலைமைச் செயலகத்தில் வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு, வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அமைச்சர் துரைக்கண்ணு கூறியதாவது:

வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. விவசாயிகளின் வாழ்வு மேம்பட வேண்டும் என்பதற்காகவே முதலமைச்சர் ஆதரவு தெரிவித்தார் என்று அவர் கூறினார்.

இதையடுத்து வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் கூறியதாவது:

வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு பாதிப்பில்லை. விவசாயிகளுக்கு நன்மையே. ஒப்பந்த வேளாண்மை குறித்து தமிழக அரசு சட்ட முன்வடிவு கொண்டு வந்துள்ளது. அவைதான் மத்திய அரசின் சட்டத்திலும் உள்ளன.

முன்கூட்டியே ஒப்பந்தம் போட்டாலும், மார்க்கெட் விலை அதிகரித்தால் அந்த விலைக்கே பொருட்களை விற்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.

ஒப்பந்த வேளாண்மை முறையில் விளைபொருட்களுக்கான விலையை முன்கூட்டியே நிர்ணயிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News