உள்ளூர் செய்திகள்
கொரோனா பரிசோதனை

தருமபுரி மாவட்டத்தில் ஒரே நாளில் 153 பேருக்கு கொரோனா

Published On 2022-01-17 11:25 GMT   |   Update On 2022-01-17 11:25 GMT
தருமபுரி மாவட்டம் முழுவதும் இதுவரை 28 ஆயிரத்து 935 பேர் குணம் அடைந்துள்ளனர்.இந்த வைரஸ் பாதிப்பால் 281 பேர் இறந்துள்ளனர்.
தருமபுரி:

தருமபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் இருந்து வந்தது.

இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 153 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது தெரிய வந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 41 பேர் நேற்று நலமுடன் வீடு திரும்பினார். தருமபுரி மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்குகிறது. இதுவரை 29 ஆயிரத்து 988 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்டம் முழுவதும் இதுவரை 28 ஆயிரத்து 935 பேர் குணம் அடைந்துள்ளனர்.இந்த வைரஸ் பாதிப்பால் 281 பேர் இறந்துள்ளனர். தற்போது 772 பேர் சிகிச்சையில் உள்ளனர். 
Tags:    

Similar News