செய்திகள்
தமிழக அரசுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
கொரோனா தடுப்பு பணிகளை சிறப்பாக மேற்கொண்டதாக தமிழக அரசுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
கொரோனா தடுப்புக்காக மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை, சிகிச்சை, சுகாதார வசதி ஆகியவை குறித்து பாதிப்பு அதிகம் உள்ள மராட்டியம், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, உத்தர பிரதேசம், டெல்லி, பஞ்சாப் ஆகிய ஏழு மாநில முதல்வர்களுடன் காணொலி வாயிலாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகளை சிறப்பாக மேற்கொண்டதாக தமிழக அரசுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.