செய்திகள்
பசவராஜ் பொம்மை

மேகதாதுவில் அணை கட்ட எங்களுக்கு உரிமை உள்ளது: கட்டியே தீர்வோம்- கர்நாடக மாநில உள்துறை அமைச்சர்

Published On 2021-07-15 10:30 GMT   |   Update On 2021-07-15 10:30 GMT
மத்திய அமைச்சரை சந்தித்து மேகதாது அணை கட்ட அனுமதி பெறுவோம் என கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்து வருகிறது. மேகதாதுவில் அணை கட்டினால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக தமிழக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி, மத்திய அரசு கர்நாடகாவை மேகதாதுவில் அணைகட்ட அனுமதி அளிக்கக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானத்தை அனைத்து கட்சிகள் உறுப்பினர்கள் குழு நேரில் சென்று மத்திய அரசிடம் வழங்க இருக்கிறது.

இதுகுறித்து கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மையிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறுகையில் ‘‘கர்நாடகாவைச் சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் டெல்லி சென்று மத்திய அமைச்சரை சந்தித்து அணை கட்டுவதற்கான அனுமதியை பெறுவோம். தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் மத்திய அமைச்சரை சந்திப்பது குறித்து எங்களுக்கு கவலை இல்லை.

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக உள்ளன. மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகாவிற்கு முழு உரிமை உள்ளது. அணையை கட்டியே தீர்வோம்’’ என்றார்.
Tags:    

Similar News