செய்திகள்
கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தொடர் மழை பெய்து வரும் நிலையில் நேற்று இரவும் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வந்தது.
கடலூர்:
மத்திய கிழக்கு மற்றும் வடமேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, வலுவடைந்து கலிங்கப்பட்டினத்திற்கு சுமார் 740 கிலோ மீட்டர் தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டு உள்ளது.
இது மேலும் வலுவடைந்து, வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலம் இடையே நாளை (26 -ந்தேதி) காலை கரை கடக்கும். இதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில்1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் நேரடி தாக்கம் இருக்க வாய்ப்பில்லை.
ஒரு சில இடங்களில் மழை வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தொடர் மழை பெய்து வரும் நிலையில் நேற்று இரவும் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வந்தது.