செய்திகள்
கோப்புபடம்

போலீஸ் நிலையங்களில் வீணாகும் வாகனங்கள்-ஏலம் விட வலியுறுத்தல்

Published On 2021-07-16 10:58 GMT   |   Update On 2021-07-16 10:58 GMT
போலீஸ் நிலைய வளாகத்திலும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வீணாகி வருகின்றன.
பல்லடம்:

பல்லடத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பழைய போலீஸ் நிலையம் முன்பும், பனப்பாளையம், மகளிர் போலீஸ் நிலையம் வளாகத்திலும் குவித்து வைக்கப்பட்டுள்ளன. அவை துருப்பிடித்து வீணாகி வருகின்றன.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில் பல்லடம் பழைய போலீஸ் நிலையம் அருகே கிடக்கும் வாகனங்கள் பல ஆண்டுகளாக நினைவு சின்னங்களாக இங்கு உள்ளன. அவை காயலான் கடைக்கு கூட வழங்க முடியாத அளவு துருப்பிடித்துள்ளன. வாகனங்கள் மீது செடி கொடிகள் படர்ந்து புதர்களும் உருவாகி வருகிறது. இதேபோல் போலீஸ் நிலைய வளாகத்திலும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வீணாகி வருகின்றன.

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் விடாமல் இதுபோன்று வைத்திருப்பதால் வாகனங்கள் வீணாவதுடன் ஏலம் விடுவதன் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருவாயும் வீணாகிறது. மேலும் தாமதிக்காமல் கிடப்பில் உள்ள வாகனங்களை ஏலம் விட போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Tags:    

Similar News