செய்திகள்
கொள்ளை

சமயபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை

Published On 2019-10-04 16:01 GMT   |   Update On 2019-10-04 16:01 GMT
சமயபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
மண்ணச்சநல்லூர்:

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள மாகாளிகுடி பகுதியைச் சேர்ந்தவர் காத்தான். கூலிதொழிலாளி. நேற்று இவர் வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பதினருடன் அவருடைய உறவினரின் இறுதிசடங்கு நிகழ்ச்சிக்கு சென்றார்.

இறுதி சடங்கு முடிந்து வீடு திரும்பினர். பின்னர் வீட்டின் பூட்டை திறந்து உள்ளே சென்றனர். அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்து 7 பவுன்நகை மற்றும் ரூ.10 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். வீட்டை சோதனை செய்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைக்கப்பட்டு அதன் வழி யாக மர்மநபர்கள் உள்ளே வந்து நகை-பணத்தை கொள்ளையடித்தது சென்றது தெரியவந்தது.

இது குறித்து காத்தான் சமயபுரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. பட்டபகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளை போன நகையின் மதிப்பு ரூ.2 லட்சமாகும்.
Tags:    

Similar News