வழிபாடு
பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவிலில் அமாவாசை கிரிவலம்

பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவிலில் அமாவாசை கிரிவலம்

Published On 2022-01-03 04:24 GMT   |   Update On 2022-01-03 04:24 GMT
பூதப்பாண்டி பூதலிங்கசாமி சிவகாமி அம்பாள் கோவிலில் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்த தேரில் சாமி எழுந்தருளி கோவிலின் உட்புறத்தில் கிரிவலம் வரும் நிகழ்ச்சி நடந்தது.
பூதப்பாண்டி பூதலிங்கசாமி சிவகாமி அம்பாள் கோவிலில் அமாவாசை முன்னிட்டு நேற்று இரவு அமாவாசை கிரிவலம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக சாமிக்கு அபிஷேகம் தொடர்ந்து மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்த தேரில் சாமி எழுந்தருளி கோவிலின் உட்புறத்தில் கிரிவலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. அதைதொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் கிரிவல அமாவாசை பக்தர்கள் சங்கத்தினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News