செய்திகள்
தற்கொலை

பென்னாகரம் அருகே குடும்ப தகராறில் பெண் தற்கொலை

Published On 2021-07-13 11:52 GMT   |   Update On 2021-07-13 11:52 GMT
பென்னாகரம் அருகே குடும்ப தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தர்மபுரி உதவி கலெக்டர் சித்ரா விஜயன் விசாரணை நடத்தி வருகிறார்.
பென்னாகரம்:

பென்னாகரம் அருகே உள்ள போடூர் போயர் காலனியை சேர்ந்தவர் கார்த்திக். பொக்லைன் ஆபரேட்டர். இவருடைய மனைவி சங்கீதா (வயது 25). இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது. அதன்படி நேற்று முன்தினமும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் மனமுடைந்த சங்கீதா நேற்று அதிகாலை வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உறவினர்கள் பென்னாகரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று சங்கீதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருமணமான 5 ஆண்டுகளில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக தர்மபுரி உதவி கலெக்டர் சித்ரா விஜயன் விசாரணை நடத்தி வருகிறார். பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News