ஆட்டோமொபைல்
இந்தியாவில் ரீகால் செய்யப்படும் புதிய மஹிந்திரா தார்
மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தார் மாடல் கோளாறு காரணமாக ரீகால் செய்யப்படுகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
மஹிந்திரா நஇறுவனம் தனது புதிய தலைமுறை தார் மாடலை திரும்ப பெறுவதாக அறிவித்து இருக்கிறது. செப்டம்பர் 7 முதல் டிசம்பர் 25, 2020 வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட தார் டீசல் வேரியண்ட்கள் திரும்ப பெறப்படுவதாக மஹிந்திரா அறிவித்து உள்ளது.
குறிப்பிட்ட தேதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட மஹிந்திரா தார் மாடல் என்ஜினில் கேம்ஷாப்ட்டில் கோளாறு கண்டறியப்பட்டு இருக்கிறது. பாதிக்கப்பட்ட யூனிட்களை பயன்படுத்துவோரை தனித்தனியாக அழைத்து கோளாறு சரி செய்து தரப்படும் என மஹிந்திரா தெரிவித்து இருக்கிறது.
2021 மஹிந்திரா தார் மாடலில் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 130 பிஹெச்பி பவர், 300 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
இத்துடன் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினும் வழங்கப்படுகிறது. இது 150 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் யூனிட் வழங்கப்படுகிறது.