செய்திகள்
இந்திய நாடாளுமன்றம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: 25 எம்.பி.களுக்கு கொரோனா

Published On 2020-09-14 10:14 GMT   |   Update On 2020-09-14 13:27 GMT
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறுவதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 25 எம்.பி.களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தள்ளிப்போனது. இறுதியாக கொரோன வைரஸ் தொற்றுக்கான வழி்காட்டு நெறிமுறைகளை கடைபிடித்து கூட்டம் இன்று தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று காலை மக்களவை கூட்டம் தொடங்கியது. அதற்கு முன் கூட்டத்தில் பங்கேற்கும் எம்.பி.க்கள் அனைவருக்கும் கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. நெகட்டிவ் முடிவு வந்தால்தான் கூட்டத்தில் பங்கேற்க முடியும் என அறிவிக்கப்பட்டது.

இதனால் எம்.பி.க்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இதில் 25 எம்.பி.க்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
Tags:    

Similar News