ஆன்மிகம்
முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

Published On 2021-02-21 07:13 GMT   |   Update On 2021-02-21 07:13 GMT
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மேலக்குமரருக்கும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆறுமுகக் கடவுளுக்கும், வெளிபிரகாரத்தில் உள்ள மேலக்குமரருக்கும் மாசி மாத கார்த்திகையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி சாமிக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. பின்னர் சாமிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதுபோல் கோடியக்காடு அமிர்தகடேஸ்வரர்கோவிலில் உள்ள அமிர்தகர சுப்பிரமணிய சாமிக்கு அபிஷேகங்கள் நடைபெற்றது. இதை தொடர்ந்து விபூதி அலங்காரம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தோப்புத்துறை கைலாசநாதர் கோவிலில் உள்ள முருகனுக்கும், ஆறுகாட்டுத்துறை கற்பகவிநாயகர் கோவிலில் அமைந்துள்ள முருகனுக்கும், வேதாரண்யம் நாட்டுமடம் மாரியம்மன் கோவிலில் உள்ள சுப்பிரமணியருக்கும் சிறப்பு வழிபாடு நடந்தது.
Tags:    

Similar News