செய்திகள்
விபத்து

பாளை அருகே கார் மோதி தொழிலாளி பலி

Published On 2021-11-20 11:13 GMT   |   Update On 2021-11-20 11:13 GMT
பாளை அருகே கார் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:

பாளை அருகே உள்ள கீழநத்தம் வடக்கூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 47). இவர் கீழநத்தம் பஞ்சாயத்தில் தூய்மை தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை ஆறுமுகம், நான்கு வழிச்சாலை வழியாக கீழநத்தம் செல்வதற்கு மொபட்டில் சென்றார். நான்கு வழிச்சாலை விலக்கில் திரும்பும்போது, பின்னால் வந்த கார் அவர் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த ஆறுமுகத்தை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி காரை ஓட்டி வந்த சிவகாசியை சேர்ந்த நாராயணசாமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News