செய்திகள்
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்

மாற்றுத்திறனாளிகள் தினம்: ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

Published On 2019-12-03 07:38 GMT   |   Update On 2019-12-03 07:38 GMT
மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் டுவிட்டர் பதிவில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.
சென்னை:

மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் டுவிட்டர் பதிவில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

தனித்திறமைகளோடு உள்ள உறுதியுடன் வாழ்க்கையில் மாற்றிக் கொண்டிருக்கும் தன்னம்பிக்கை நாயகர்களான மாற்றுத்திறனாளி சகோதர - சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துக்கள்.

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளையும், நலன்களையும் பேணிக்காக்க என்றும் உறுதுணையாக இருப்போம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News