செய்திகள்
மழை

6 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை

Published On 2021-09-04 08:20 GMT   |   Update On 2021-09-04 09:25 GMT
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:-

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கோவை, சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் 6-ந் தேதி வரை இடியுடன் கூடிய கனமழையும், கடலோர டெல்டா மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.


நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும். கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஏற்காடு 13 செ.மீ., சாத்தனூர், இளையான்குடி தலா 6 செ.மீ. மழை பெய்துள்ளது.

வடக்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகிறது. மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால் மீனவர்கள் 2 நாட்களுக்கு வங்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.


Tags:    

Similar News