ஆன்மிகம்
காடையாம்பட்டியில் ஏரிக்கரை மகா முனீஸ்வரர் கோவில் திருவிழா
காடையாம்பட்டியில் ஏரிக்கரை மகா முனீஸ்வரர் கோவில் விழாவையொட்டி காலையில் சாமிக்கு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது.
காடையாம்பட்டி கோட்டை குள்ளமுடையான் ஏரிக்கரையில் மகா முனீஸ்வரி, மகா முனீஸ்வர சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி முதலாம் ஆண்டு சிறப்பு பூஜை மற்றும் திருவிழா நடைபெற்றது.
விழாவையொட்டி காலையில் சாமிக்கு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல், சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிறைவாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், கோட்டேரி மற்றும் குள்ளமுடையான் ஏரி ஆயக்கட்டுதாரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
விழாவையொட்டி காலையில் சாமிக்கு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல், சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிறைவாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், கோட்டேரி மற்றும் குள்ளமுடையான் ஏரி ஆயக்கட்டுதாரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.