செய்திகள்
குழந்தை பலி

வேளாங்கண்ணியில் விடுதி மாடியில் இருந்து தவறி விழுந்த 3 வயது குழந்தை பலி

Published On 2020-09-12 10:01 GMT   |   Update On 2020-09-12 10:01 GMT
வேளாங்கண்ணியில் விடுதி மாடியில் இருந்து தவறி விழுந்த 3 வயது குழந்தை பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேளாங்கண்ணி:

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசமர தெரு பகுதியை சேர்ந்த மகன் ராமதாஸ்(வயது 30) இவர் நேற்று முன்தினம் தனது மனைவி மற்றும் 3 வயது குழந்தை மனுஸ்ரீ ஆகியோருடன் வேளாங்கண்ணிக்கு வந்தார். பின்னர் அவர்கள் அங்குள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தனர். இந்த நிலையில் நேற்று குழந்தை மாடியில் இருந்து தவறி விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அந்த குழந்தையை ராமதாஸ் தம்பதியினர் நாகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியிலேயே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News