செய்திகள்
திருட்டு

பள்ளிக்கூடத்தில் ரூ.2 லட்சம் திருட்டு

Published On 2021-10-22 10:52 GMT   |   Update On 2021-10-22 10:52 GMT
பள்ளிக்கூடத்தில் ரூ.2 லட்சம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்குன்றம்:

செங்குன்றம் பைபாஸ் சாலை அருகே தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு கன்னியாஸ்திரிகள் தங்கும் விடுதியும் உள்ளது. யாரோ மர்மநபர்கள், கன்னியாஸ்திரிகள் தங்கும் விடுதிக்குள் புகுந்து அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.2 லட்சத்தை திருடிச் சென்றுவிட்டனர். இதுபற்றி செங்குன்றம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அதேபோல் புழல் லட்சுமிபுரம் நேதாஜி தெருவை சேர்ந்தவர் அம்சவல்லி(வயது 62). இவர் குடும்பத்துடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது மர்ம ஆசாமிகள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைத்து இருந்த 5 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ஆகியவற்றை திருடிச் சென்று விட்டனர். இதுபற்றி புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News