செய்திகள்
மோட்டார் சைக்கிளை பாடை கட்டி தூக்கி வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியினர்.

மோட்டார் சைக்கிளை பாடை கட்டி தூக்கி வந்து ஆர்ப்பாட்டம்

Published On 2021-07-10 09:35 GMT   |   Update On 2021-07-10 09:35 GMT
விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
திருப்பூர்:

திருப்பூரில் பெட்ரோல், டீசல் , சமையல் எரிவாயுக்களின் விலை உயர்வை கண்டித்து மாநகராட்சி அலுவலகம் எதிரில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு பரப்புரையாளர் மாநிலச் செயலாளர் சிவபாலன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர்கள் கமல் ஜீவா, ராஜா முகமது, சுரேஷ், சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுக்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. 

மேலும் மோட்டார் சைக்கிளை பாடை கட்டி தூக்கி வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News