வழிபாடு
இருளப்பபுரம் பசுபதீஸ்வரர் - பிரசன்ன பார்வதி திருக்கோவில் சித்திரைத் திருவிழா

இருளப்பபுரம் பசுபதீஸ்வரர் - பிரசன்ன பார்வதி திருக்கோவில் சித்திரைத் திருவிழா

Published On 2022-04-08 03:26 GMT   |   Update On 2022-04-08 03:26 GMT
நாகர்கோவில் அருகே உள்ள இருளப்பபுரம் அருள்மிகு பசுபதீஸ்வரர் - பிரசன்ன பார்வதி திருக்கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா 16-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
நாகர்கோவில் அருகே உள்ள இருளப்பபுரம் அருள்மிகு பசுபதீஸ்வரர் - பிரசன்ன பார்வதி திருக்கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா 16-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.

திருவிழாவின் முதல் நாளான நேற்று அதிகாலை 4 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், 4.30 மணிக்கு கணபதி ஹோமமும், 5.30 மணிக்கு தேவார பஜனையும், 7 மணிக்கு தீபாராதனையும், 7.30 மணிக்கு திரளான பக்தர்கள் முன்னிலையில் இருளப்பபுரம் சிவ தேவஸ்தான நிர்வாக குழு தலைவர் தனபாலன் திருக்கொடியை ஏற்றி வைத்தார்.

10 மணிக்கு முருகப்பெருமானுக்கு சஷ்டி அபிஷேகமும், மாலை 6 மணிக்கு இருளப்பபுரம் சிவ தேவஸ்தான சிவசக்தி மகளிர் மன்றத்தாரின்1008 திருவிளக்கு பூஜை வழிபாடும் நடக்கிறது. இந்த திருவிளக்கு பூஜை வழிபாட்டிற்கு இருளப்பபுரம் சிவசக்தி மகளிர் மன்ற தலைவி பொன்லெட்சுமி தர்மராஜா, தலைமை தாங்குகிறார்.

நிகழ்ச்சியில் மேகலை மகேஷ் முதல் திருவிளக்கை ஏற்றி வைக்கிறார்.திரு விளக்கு பூஜையை பார்வதி புரம் ஸ்ரீ சாரதா ஆஸ்ரமம் சித்தாந்த ரெத்தினம் நிவேதிதா ஔவை. அன்புமதி நடத்துகிறார்.

திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டவர்களுக்கு நாகர்கோவில் மாநகராட்சி 11வது வார்டு உறுப்பினர் ஸ்ரீ லிஜா முருகேசன் பரிசுகள் வழங்குகிறார்.
இரவு 8 மணிக்கு திரைப்பட பக்தி மெல் லிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

திருவிழாவின் 2 ம் நாளான இன்று 8-ந் தேதி வெள்ளிக்கிழமை காலை 4.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், 5.30 மணிக்கு தேவாரப் பஜனையும், 8.30 மணிக்கு திருவாதிரை விழாவான அருள்மிகு நடராஜமூர்த்தி சிவகாமி அம்மாளுக்கு சிறப்பு அபிஷேகமும் மற்றும் வாகனத்தில் திருக்கோயிலை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

முற்பகல் 11 மணிக்கு தீபாராதனையும், மாலை 5.30 மணிக்கு தேவார பஜனையும், மாலை 6.30 மணிக்கு தீபாராதனையும், இரவு 7 மணிக்கு சிவ தேவஸ்தான சிவா இளைஞர் நற்பணி மன்றத்தின் ஆண்டு விழாவும், இரவு 8 மணிக்கு மாபெரும் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
இதைப்போன்று திருவிழாவின் அனைத்து நாட்களிளும் திருப்பள்ளிஎழுச்சி, தேவார பஜனை, தீபாரதனை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

திருவிழாவின் 3 ம் திருவிழாவான 9-ந் தேதி சனிக்கிழமை இரவு 9 மணிக்கு மாபெரும் வழக்காடு மன்றம் நிகழ்ச்சியும். 4 ம் நாள் திருவிழாவான 10-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு சாந்தி விநாயகர் அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனையும் நடைபெறுகிறது.

5 ம் திருவிழாவான 11 ஆம் தேதி திங்கட்கிழமை இரவு 7 மணிக்கு சிவ தேவஸ் தான சிவசக்தி மகளிர் மன்ற மாநாடும், இரவு 8 மணிக்கு இருளப்பபுரம் சிவ தேவஸ்தான சிவசக்தி மகளிர் மன்றத்தாரின் கலை நிகழ்ச்சிகளும் நடை பெறுகிறது.

6 ம் திருவிழாவான 12 ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு 67வது இந்து சமய மாநாடு நிகழ்ச்சியும். இரவு 8 மணிக்கு  திரைப்பட மெல்லிசை விருந்து நிகழ்ச்சியும் நடை பெறுகிறது.

7 ம் திருவிழாவான 13ம் தேதி புதன்கிழமை இரவு 7 மணிக்கு அருள்மிகு பிரசன்ன பார்வதி உடனுறை பசுபதீஸ்வரர் திருக் கல்யாண மும், இரவு 8 மணிக்கு அருள்மிகு பசுபதீஸ்வரர் பிரச்சனை பார்வதி பவனி வருதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

8 ம் திருவிழாவான 14-ஆம் தேதி வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தமிழ் வருடப்பிறப்பு சிறப்பு பூஜையும், மாலை 3 மணிக்கு பிரதோஷ விழா, மாலை 6 மணிக்கு சுவாமி பரிவேட்டை நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு சிவ அருள்நெறி திருக்கூட்ட 62 வது ஆண்டு விழா நிகழ்ச்சியும். இரவு 9 மணிக்கு இருளப்பபுரம் பசுபதீஸ்வரர் தேவார இன்னிசை குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

9 ம் திருவிழாவான 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு பல்சுவை ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது..

10-ந் திருவிழாவான 16ஆம் தேதி சனிக்கிழமை காலை 4.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், 5.30 மணிக்கு தேவாரப்-பஜனையும், 6.30 மணிக்கு தீபாராதனையும், 8 மணிக்கு பாலாபிஷேகமும், முற்பகல் 11 மணிக்கு தீபாராதனையும், 12:00 மணிக்கு திருக்காவடி எடுத்தல் நிகழ்ச்சியும், பிற்பகல் 1 மணிக்கு  அன்னதானமும்,

மாலை 5.30 மணிக்கு தேவாரப் பஜனையும், மாலை 6.30 மணிக்கு தீபாராத-னையும், இரவு 7 மணிக்கு சித்திரை திருவிழா சிறப்பு மாநாடு நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு சுரேஷ்குமார் வழங்கும் டெலிவிஷன் பிரபலங்கள் பங்கேற்கும்  மெல்லிசை விருந்து நிகழ்ச்சியும். நள்ளிரவு 12 மணிக்கு மாபெரும் வானவேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இருளப்பபுரம் சிவ தேவஸ்தான நிர்வாகக் குழுவினரும், ஊர் பொதுமக்களும், மற்றும் சிவ பக்தர்களும் இணைந்து செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News