செய்திகள்
அரிமளம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி
அரிமளம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரிமளம்:
அரிமளம் அருகே உள்ள இடையன்வயல் கிராமத்தை சேர்ந்தவர் குமாரசாமி. இவரது மகன் முத்து (வயது 44). விவசாயியான இவர் நேற்று வீட்டில் டி.வி.யை இயக்க முயன்றபோது திடீரென மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கே.புதுப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.