செய்திகள்
சென்னை குடிநீர் வாரியம்

சென்னை மாநகர மக்களுக்கு குடிநீரில் தினமும் 11 மெட்ரிக் டன் குளோரின் கலந்து வினியோகம்

Published On 2021-11-24 08:41 GMT   |   Update On 2021-11-24 10:31 GMT
பொதுக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கும் பொருட்டு சென்னைக்கு குடிநீர் வாரியத்தால் குடிநீர் விநியோக நிலையங்களில் 11 மெட்ரிக் டன் திரவ வடிவிலான குளோரின் செலுத்தப்பட்டு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை:

சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில் வசிக்கும் 85 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு தினந்தோறும் வழங்கப்படும் 1000 மில்லியின் லிட்டர் எல்.எல்.டி. குடிநீரில் 11 மெட்ரிக் டன் திரவ வடிவிலான குளோரின் செலுத்தப்பட்டு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை குடிநீர் வாரியம் சார்பில் கீழ்ப்பாக்கம் நீரேற்றும் நிலையம், புழல் நீரேற்றும் நிலையம், சூரப்பட்டு நீரேற்றும் நிலையம், வீராணம் நீரேற்றும் நிலையம் செம்பரம்பாக்கம் நீரேற்றும் நிலையம் நெம்மேலி மற்றும் மீஞ்சூர் ஆகிய கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் மூலமாக பொதுமக்களுக்கு நாளொன்றுக்கு 850 மில்லியன் லிட்டர் எல்.எல்.டி. குடிநீர் வழங்கப்பட்ட நிலையில் தற்போது 1000 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

சென்னைக்கு குடிநீர் வாரியத்தின் சார்பில் பெருநகர சென்னை மாகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விநியோகிக்கப்பட்டும் குடிநீரின் தரம் தினந்தோறும் 300 இடங்களில் குடிநீர் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது பருவமழையின் காரணமாக தினந்தோறும் 600 இடங்களில் குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. நேற்று வரை 8,929 இடங்களில் குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு குடிநீரின் தரம் பரிசோதனை செய்யப்பட்டது. இப்பணிகள் தொடர்ந்து நடைபெறும்.



மேலும் பொதுக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கும் பொருட்டு சென்னைக்கு குடிநீர் வாரியத்தால் தினந்தோறும் கீழ்ப்பாக்கம், சூரப்பட்டு, செம்பரம்பாக்கம், புழல் வீராணம் நீரேற்றும் நிலையங்கள் மற்றும் 16 குடிநீர் விநியோக நிலையங்களில் 11 மெட்ரிக் டன் திரவ வடிவிலான குளோரின் செலுத்தப்பட்டு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் பருவமழையினால் மழைநீர் தேங்கிய தாழ்வான பகுதிகள் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தும் வகையில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீரில் கலந்து பருகக்கூடிய குளோரின் மாத்திரைகள் சென்னை குடிநீர் வாரியத்தால் வழங்கிட திட்டமிடப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன் அடிப்படையில் 15 லட்சம் குளோரின் மாத்திரைகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை 7,25,000 குளோரின் மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மேற்கண்ட பகுதிகளில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் மழை காலங்களில் தொற்று நோய் பரவாமல் இருக்க குடிநீரைப் பயன்படுத்துவதற்கு முன்பு ஒரு குளோரின் மாத்திரையை 15 லிட்டர் குடிநீருடன் கலந்து 2 மணி நேரம் கழித்து பயன்படுத்த அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.

பருவமழைக் காலங்களில் குடிநீரை காய்ச்சி பருகிட வேண்டும். மேலும் உரிய இடைவெளியில் சீரான முறையில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதால் பொதுமக்கள் தேவைக்கு அதிகமாக குடிநீரைச் சேமித்து வைக்க வேண்டாம்.

மேலும் குடிநீரைச் சேமித்து வைக்கும் பாத்திரங்கள், டிரம்கள், மேல்நிலை, கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் ஆகியவற்றை முறையாக சுத்தப்படுத்தி பயன்படுத்த வேண்டும்.

எனவே பருவமழையினால் தொற்று பரவாமல் இருப்பதற்காக சென்னை குடிநீர் வாரியம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags:    

Similar News