ஆன்மிகம்
வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அனைத்து சனிக்கிழமைகளிலும் பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள். அந்த வகையில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த வரதராஜ பெருமாளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
இதேபோல் மஞ்சக்குப்பம் ஆட்கொண்ட வரதராஜ பெருமாள் கோவிலிலும் சிறப்பு பூஜை நடந்தது. கொரோனா பரவல் காரணமாக இந்த பூஜையில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடந்தது.
இதேபோல் மஞ்சக்குப்பம் ஆட்கொண்ட வரதராஜ பெருமாள் கோவிலிலும் சிறப்பு பூஜை நடந்தது. கொரோனா பரவல் காரணமாக இந்த பூஜையில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடந்தது.