உள்ளூர் செய்திகள்
கைதான கரியமால்

புகையிலை பொருட்கள் பறிமுதல்

Published On 2022-04-17 10:10 GMT   |   Update On 2022-04-17 10:10 GMT
திருமங்கலம் அருகே 13 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருமங்கலம்

மதுரை மாவட்டம் சிந்துபட்டி போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் குபேந்திரன் தலைமையில்  போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.  தும்மக்குண்டு கிராமத்தில்  அந்த வழியாக டூவிலரில் வந்தவரை நிறுத்தி அவரிடமிருந்த பைகளை சோதனையிட்டனர். 

அதில் அரசால் தடை செய்யப்பட்ட 43 பாக்கெட்  புகையிலை 13 கிலோ இருந்தது. மேலும் புகையிலை பாக்கெட் விற்ற பணம் ரூ.28 ஆயிரமும் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே யுள்ள சின்னகவுனம்பட்டி சேர்ந்த கரியமாலை(45)   கைது செய்தனர். 

அவரிடமிருந்த டூவிலரையும் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து டூவிலரில் வந்து மதுரை மாவட்ட கிராம பகுதிகளில் உள்ள கடை களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வது   விசாரணையில் தெரியவந்தது.
Tags:    

Similar News