செய்திகள்
வேலூரில் டெங்கு கொசு ஒழிப்பு பணி- லாட்ஜ், வீடுகளுக்கு ரூ.18 ஆயிரம் அபராதம்
வேலூரில் டெங்கு கொசு ஒழிப்பு ஆய்வின் போது லாட்ஜ், வீடுகளுக்கு ரூ.18 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
வேலூர்:
வேலூர் மாநகராட்சி பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கொசு புழுக்கள் கண்டறியபட்டு அபராதம் விதித்து வருகின்றனர்.
மாநகராட்சி 2-வது மண்டல அலுவலர் சிவக்குமார், முதுநிலை பூச்சியியல் வல்லுனர் முனுசாமி மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் காந்திரோடு, பாபுராவ்தெரு பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட லாட்ஜிகளில் சோதனை செய்தனர்.
அப்போது கொசு புழுக்கள் இருந்த 6 லாட்ஜிகளுக்கு ரூ.2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது. சுகாதாரமற்ற முறையில் இருந்த லாட்ஜிகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர்.
அந்த பகுதியில் உள்ள வீடுகளில் நடந்த சோதனையில் 6 வீடுகளில் கொசு புழு இருந்தது தெரியவந்தது. அந்த வீடுகளுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர். மொத்தம் 18 ஆயிரத்து 300 அபராதம் விதித்தனர்.
வேலூர் மாநகராட்சி பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கொசு புழுக்கள் கண்டறியபட்டு அபராதம் விதித்து வருகின்றனர்.
மாநகராட்சி 2-வது மண்டல அலுவலர் சிவக்குமார், முதுநிலை பூச்சியியல் வல்லுனர் முனுசாமி மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் காந்திரோடு, பாபுராவ்தெரு பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட லாட்ஜிகளில் சோதனை செய்தனர்.
அப்போது கொசு புழுக்கள் இருந்த 6 லாட்ஜிகளுக்கு ரூ.2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது. சுகாதாரமற்ற முறையில் இருந்த லாட்ஜிகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர்.
அந்த பகுதியில் உள்ள வீடுகளில் நடந்த சோதனையில் 6 வீடுகளில் கொசு புழு இருந்தது தெரியவந்தது. அந்த வீடுகளுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர். மொத்தம் 18 ஆயிரத்து 300 அபராதம் விதித்தனர்.