செய்திகள்
கிறிஸ் கெய்ல்

இந்தியா தொடரில் நான் இல்லை: கிறிஸ் கெய்ல்

Published On 2019-11-27 09:43 GMT   |   Update On 2019-11-27 09:43 GMT
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஆன கிறிஸ் கெய்ல், கிரிக்கெட்டில் இருந்து சிறிது காலம் விலகி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கலந்து கொள்ள இயலாது. சிறிது காலம் ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ளேன் என்று கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கிறிஸ் கெய்ல் கூறுகையில் ‘‘வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு, இளைஞர்களுடன் இணைந்து நான் விளையாட விரும்பியது. ஆனால், நான் இந்த வருடம் முழுவதும் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருக்க விரும்புகிறேன்.

பிக் பாஷ் டி20 லீக்கிலும் விளையாடமாட்டேன். மீண்டும் எப்போது கிரிக்கெட்டுக்கு திரும்புவேன் என்பதை உறுதியாக கூற முடியாது. வங்காளதேச லீக்கில் என்னை தேர்வு செய்துள்ளனர். வீரர்கள் வரைவு பட்டியலில் என்னுடைய பெயர் எப்படி சேர்ந்த என்று எனக்குத் தெரியாது’’ என்றார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் மான்சி டி20 லீக்கில் 0விளையாடிய பின்னர் சொந்த நாடு திரும்பினார். அப்போது ஒன்றிரண்டு போட்டிகளில் நான் விளையாடாமல் போனால், அணிக்கு சுமை என்று நினைக்கிறார்கள் என்று ஆதங்கத்தோடு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News