ஆன்மிகம்
சதுரகிரி மலை அடிவாரத்தில் குவிந்த போலீசார்

திடீர் தடை: சதுரகிரி மலை அடிவாரத்தில் குவிந்த பக்தர்களை திருப்பி அனுப்பிய போலீசார்

Published On 2021-11-16 07:48 GMT   |   Update On 2021-11-16 07:48 GMT
கார்த்திகை மாத பிரதோ‌ஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு இன்று முதல் 19-ந் தேதி வரை மொத்தம் 4 நாட்கள் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கி இருந்தது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். இந்த கோவிலானது தரை மட்டத்தில் இருந்து சுமார் 4 ஆயிரத்து 500 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

இந்த கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை 4 நாட்கள், பவுர்ணமி 4 நாட்கள் என மொத்தம் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது .

இந்த நிலையில் கார்த்திகை மாத பிரதோ‌ஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு இன்று முதல் 19-ந் தேதி வரை மொத்தம் 4 நாட்கள் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கி இருந்தது.

மேலும் மழை பெய்தால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாகவும், இன்று மழை பெய்வதற்கான அறிகுறி இருப்பதாலும் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு இன்று பிரதோ‌ஷத்தை முன்னிட்டு பக்தர்கள் செல்ல கோவில் நிர்வாகம் திடீர் தடை விதித்துள்ளது.

இதனால் பிரதோ‌ஷத்தை முன்னிட்டு வருகை தந்த ஏராளமான பக்தர்கள் அடிவாரத்தில் குவிந்தனர். அவர்களிடம் போலீசாரும், வனத்துறையினரும் மழை விவரங்களை கூறி திருப்பி அனுப்பினர்.

Tags:    

Similar News