செய்திகள்
திருச்சி அருகே கஞ்சா விற்ற 3 பேர் கைது
திருச்சி அருகே கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:
திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே கஞ்சா விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த அக்பர் கானை (வயது 38) கோட்டை போலீசார் கைது செய்தனர். இதேபோல் திருச்சி தென்னூர் சின்னசாமி நகர் பகுதியில் காஜாமைதீன் (28), முகமது சலீம் (21) ஆகியோரை கஞ்சா விற்றதாக தில்லைநகர் போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து மொத்தம் ½ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.