செய்திகள்
பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கல்
குலசேகரன்பட்டினம் பகுதியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் பகுதியில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக ஊராட்சி சார்பில் கிருமிநாசினி ஊர் முழுவதும் தெளிக்கப்பட்டு வருகிறது . மேலும் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது .குலசேகரன்பட்டினம் ஊராட்சி 8-வது,9-வது மற்றும் 11-வது வார்டு ஊராட்சி உறுப்பினர்கள் சார்பில் ஊராட்சி தலைவர் சொர்ண பிரியா துரை, அசானிய நடுநிலைப்பள்ளி அருகே பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார். இதில் ஆயிரத்து இருநூறுக்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.