இந்தியா
பத்ரிநாத் கோவில்

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு

Published On 2021-12-27 03:39 GMT   |   Update On 2021-12-27 03:39 GMT
வாரம் முழுவதும் பனிப்பொழிவு நீடிக்கும் என்று மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சாமோலி :

வடமாநிலங்களை கடும் குளிர் வாட்டி வரும் நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று அதிகாலை கடும் பனிப்பொழிவு காணப்பட்டது.  அம்மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் கட்டங்கள், வாகனங்கள், மரங்கள் பனி மூடி காணப்பட்டன.  அங்குள்ள பத்ரிநாத் கோவில் பகுதிகளில் நீடித்த பனிபொழிவால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

அதிகாலை வேளையில் குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 3 டிகிரி செல்ஷியஸ் ஆக பதிவானது. அடுத்த ஒருவாரத்திற்கு பனிப்பொழிவு நீடிக்கும் என்றும் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உண்டு என மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

====
Tags:    

Similar News