செய்திகள்
தஞ்சை அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சையை அடுத்த மானோஜிப்பட்டி பகுதியில் சூதாட்டம் நடைபெறுவதாக தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது பொதிகை நகர் பகுதியில் உள்ள புது ஆற்றங்கரையில் நின்று கொண்டிருந்த சிலரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பொதிகை நகரை சேர்ந்த ராஜா(வயது24), ஈஸ்வரிநகர் பகுதியை சேர்ந்த முகமதுபக்ருதீன்(42), வனதுர்கா நகரை சேர்ந்த வடிவேலு(39), பாலு(43), வடக்கு மனோஜிப்பட்டியை சேர்ந்த விஜயகுமார்(34) ஆகியோர் என்பதும், அவர்கள் பணம் வைத்து சூதாடியதும் தெரியவந்தது. இதுகுறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த ரூ.4,810-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.