செய்திகள்
கடத்தி வரப்பட்ட தங்கம்

சென்னை விமான நிலையத்தில் 1.75 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

Published On 2021-01-24 14:40 GMT   |   Update On 2021-01-24 14:40 GMT
துபாயில் இருந்து வந்த ஐந்து பயணிகளிடம் 3.45 கிலோ எடையுள்ள 1.75 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
துபாயில் இருந்து பயணிகள் மூலம் தங்கம் கடத்தி வரப்படுகிறது. சென்னை, திருச்சி விமான நிலையங்களில் இதுபோன்ற நபர்களை குறிவைத்து பிடித்து சுங்கஅதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இன்று துபாயில் இருந்து வந்த ஐந்து பயணிகளிடம் சோதனை நடத்தினர். அப்போது சிகரேட், லேப்டாப்பில் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் மலக்குடலில் 18 பொட்டலங்களில் தங்கத்தை மறைத்து வைத்து கொண்டு வந்துள்ளனர். இவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.



அதேபோல் கடத்தலுக்கு பயன்படுத்திய 2.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான லேப்டாப், சிகரெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News