செய்திகள்
கோப்பு படம்.

ராசிபுரம் அருகே 2 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை: முதியவர் உட்பட 7 பேர் கைது

Published On 2020-10-12 10:48 GMT   |   Update On 2020-10-12 10:48 GMT
ராசிபுரம் அருகே 2 சிறுமிகளை 75 வயது முதியவர் உட்பட 7 பேர் பாலியல் வன்கொடுமை செய்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.
நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே 2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் 2 சிறுமிகளை 75 வயது முதியவர் உட்பட 7 பேர் பாலியல் வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. 

இதையடுத்து 75 வயது முதியவர் உட்பட 7 பேரை ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும் சிறுமிகள் இருவரையும் 7 பேர் 6 மாதகாலமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News