செய்திகள்
தென்னை மரம்

தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

Published On 2020-11-21 13:36 GMT   |   Update On 2020-11-21 13:36 GMT
மரக்காணம் அருகே தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்துக் கொண்டிருந்த தொழிலாளி தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
மரக்காணம்:

மரக்காணம் அருகே உள்ள குறும்பரம் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 43). தொழிலாளி. சம்பவத்தன்று தனது வீட்டின் பின்புறம் உள்ள தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மரத்தில் இருந்து திடீரென்று தவறி கீழே விழுந்தார். இதில் சிவக்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனே புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிவக்குமார் பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்த புகாரின் பேரில் மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News