உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

அவினாசி, சேவூர் பகுதியில் நாளை மின்தடை

Published On 2021-12-26 05:23 GMT   |   Update On 2021-12-26 05:23 GMT
விராலிகாடு, தண்ணீர்பந்தல், பள்ளக்காடு, தண்டுக்காரன்பாளையம், வளையபாளையம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.
அவினாசி:

சேவூர், வடுகபாளையம், தெக்கலூர் துணை மின்நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 27-ந்தேதி (திங்கட்கிழமை) இந்த துணை மின் நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.  

இதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தெக்கலூர் துணை மின் நிலையத்துக்குட்பட்ட வடுகபாளையம், வினோபா நகர், ராயர்பாளையம், செங்காளிபாளையம், வெள்ளாண்டிபாளையம், சாவக்காட்டுபாளையம், சேவூர், குளத்துப்பாளையம், சென்னியாண்டவர் கோவில், விராலிகாடு, தண்ணீர்பந்தல், பள்ளக்காடு, தண்டுக்காரன்பாளையம், வளையபாளையம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. 

சேவூர், வடுகபாளையம் துணை மின் நிலையங்களுக்குட்பட்ட சேவூர், அசநல்லிபாளையம், சூரிபாளையம், ராமியம்பாளையம், புலிப்பார், போத்தம்பாளையம், சந்தைபுதூர், பாப்பான்குளம், வாலியூர், தண்ணீர்பந்தல்பாளையம், முதலிபாளையம், கூட்டப்பள்ளி, புஞ்சைத்தாமரைக்குளம், சாவக்காட்டுப்பாளையம், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. 

மேலும் சாலைப்பாளையம், நடுவச்சேரி, கருக்கன் காட்டுப்புதூர், தளிஞ்சிபாளையம், மாரப்பம்பாளையம், வடுகபாளையம், அய்யம்பாளையம், நஞ்சைத்தாமரைக்குளம், பிச்சாண்டம்பாளையம், ஒட்டபாளையம், ஓலப்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது. 

இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர்கள் செந்தில்குமார், விஜயஈஸ்வரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News